சனி, 24 ஜனவரி, 2009
கொரியச் சிறுவர் கதை
"காஞ்சி"யும் "பாட்ஜி"யும்
முன்னுரையாக
என்னுரை.....!
குழந்தைகளுக்கான கதை எழுத என்னுள் தீவிரம் கொழுந்துவிட்டபோது
கூடவே முளைத்த எண்ணங்கள் எனக்குள் சில புரிதல்களை பிரசவித்தது.
நம்பும்படியான கதைகளைச் சொல்வதா? நம்ப இயலாத கற்பனை
வினோதங்களை விதைப்பதா? எனக்குள் ஒரு போர்க்களமே
உருவானது.எதிரும் புதிருமாக என்மனமே நின்று
விவாதங்கள் செய்தது.
கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் எண்ணங்கள் விரியவேண்டும். கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கவேண்டும்;
புதிதுபுதிதான கற்றலில் ஈட்படவேண்டும்.
குழந்தைகள் கண்டுபிடிப்பாளர்களாக பரிணமிக்க வேண்டும்;
குழந்தைகள் என்ற எல்லைக்கோட்டைத் தாண்டிக் கடப்பதாக இருக்கவேண்டும்.
அவர்களுக்குள் கொட்டிக்கிடக்கும் ஆற்றல்கள் ஆர்ப்பரித்துக்கிளம்பவேண்டும்; மின்னல்
கீற்றுகளாய் குழந்தைகள் பூமியில் வேர் பாய்ச்சவேண்டும்!
இப்படியெல்லாம் நிகழ குழந்தைகள் தங்கள் கற்பனைச் சிறகுகளை விரிக்க வேண்டும்.
நம்பும் நம்பிக்கைகளை விதைக்க வேண்டும்; நம்பமுடியாத கற்பனைகளையும் பூந்தூவலாகப் பொழியவேண்டும். அப்போதுதான் அவர்களின் எண்ணச் சிறகுகள்
வானப்பெரிதாக வளரும்! சூரியனையே சுட்டெரிக்கும் கதிர்களாக விரியும்.
இதை
குழந்தைகளிடையே வளர்த்தெடுக்க வேண்டுமானல் குழந்தைகளுக்கான பங்களிப்புச் செய்யவேண்டும் என்ற என் உள் மன ஓசைக்கு வடிவம் கொடுக்க எண்ணினேன்.
அந்த நொடிப்பொழுதில் என் மனதில் எஞ்சி நின்றதும், விஞ்சி நின்றதும் இதுதான்:-
சிறார்க்கு நம்பிக்கைச் சிறகுகளை முளைக்க வைக்கிற அதே நேரத்தில் உலகின் வெவ்வேறு நாடுகளில் உலவும் குழந்தைகள் கதையை நம் குழந்தைகளுக்கு மொழிமாற்றம் செய்து கிடைக்கச் செய்யவேண்டும் என்பதுதான் அது!
என் மன உந்துதலுக்கு கொரிய நாட்டில் குழந்தைகள் உலகில் வெற்றிக்கதையாக உலாவரும் கொரியன் சிண்ட்ரெல்லாவை நம் தமிழ் குழந்தைகளுக்கு வழங்கும்
என் சிறு முயல்வு இது!
தமிழ் சிஃபி இணைய இதழ் ஆசிரியர் நண்பர் அண்ணா கண்ணன் அவர்கள்http://sify.com/tamil/art/fullstory.php?id=14843745
குடியரசு தின சிறப்பிதழிலிருந்து இந்தக் கொரியச் சிறுகதையை தொடராக வெளியிடுகிறார்கள். அவருக்கு என் கனிவான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக